Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 பள்ளி மாணவி பூச்சி மருத்து குடித்து தற்கொலை !

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (18:14 IST)
விழுப்புரம் மாவட்டம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பூச்சி மருத்து குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மல்லிகப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி மாம்பலப்பட்டு என்ற பகுதியில் பள்ளியில் அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவி, காலையில் வகுப்பில் மயங்கி விழுந்தார். உடனே பள்ளி ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பூச்சி மருத்து குடித்துள்ளதாகவும் அவரை மேல்சிகிச்சைக்காக விழுப்புரம்  அருகேயுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர்.

அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவி இன்று சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாணவிக்கு அதேபகுதியைச் சேர்ந்த ஒரு மாணவருடன் காதல் இருந்ததாகவும், இது மாணவியின் வீட்டிற்கு தெரியவே அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்ததாகவும் இதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.   இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments