கை விடாத நம்பிக்கை; கைகள் இல்லாமலே தேர்வெழுதி சாதித்த மாணவி!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (10:45 IST)
நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கைகள் இல்லாமலே மாணவி ஒருவர் தேர்வு எழுதி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த மாதம் பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்திருந்தனர். மேலும் பலர் பல பாடங்களிலும் 100க்கு 100 எடுத்து சாதனை படைத்தனர்.

இந்நிலையில் மயிலாடுதுறையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கைகள் இல்லாமலே தேர்வு எழுதி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். மயிலாடுதுறையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி லட்சுமி பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்தவர். இதனால் அவரது பெற்றோர் அவரை கைவிட்ட நிலையில் தனது 2 வயது முதலே ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்ந்து வந்துள்ளார் லட்சுமி.

அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த லட்சுமி இரண்டு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியர் உதவியுடன் தனது பாடங்களை வாயால் சொல்லியே தேர்வை எழுதி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments