Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை விடாத நம்பிக்கை; கைகள் இல்லாமலே தேர்வெழுதி சாதித்த மாணவி!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (10:45 IST)
நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கைகள் இல்லாமலே மாணவி ஒருவர் தேர்வு எழுதி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த மாதம் பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்திருந்தனர். மேலும் பலர் பல பாடங்களிலும் 100க்கு 100 எடுத்து சாதனை படைத்தனர்.

இந்நிலையில் மயிலாடுதுறையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கைகள் இல்லாமலே தேர்வு எழுதி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். மயிலாடுதுறையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி லட்சுமி பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்தவர். இதனால் அவரது பெற்றோர் அவரை கைவிட்ட நிலையில் தனது 2 வயது முதலே ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்ந்து வந்துள்ளார் லட்சுமி.

அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த லட்சுமி இரண்டு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியர் உதவியுடன் தனது பாடங்களை வாயால் சொல்லியே தேர்வை எழுதி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நிதி நிறுவனங்களில் 72 மணி நேரம் சோதனை.! ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.!!

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைப்பு.! பயணிகள் ஏமாற்றம்.!!

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments