Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: ரூ.100ஐ நெருங்கியதால் பரபரப்பு!

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: ரூ.100ஐ நெருங்கியதால் பரபரப்பு!
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (07:34 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில வாரங்களாக உயராமல் ஒரே விலையில் இருந்த நிலையில் நேற்று திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது 
 
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 99.58 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் டீசல் விலை இன்று ஒரே நாளில் 29 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.74 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100ஐ நெருங்கி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

23.45 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!