Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீண்ட நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

நீண்ட நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
, செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (07:14 IST)
கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக டீசல் விலையில் மட்டும் மாற்றம் இருந்து வந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று நீண்ட நாட்களுக்கு பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டுமே விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 19 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து 99.15 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டீசல் விலை இன்று 24 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து 94.17 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

23.30 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!