Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இட ஒதுக்கீடு வந்ததும் ரிசல்ட் விடுங்க.. ஆளுனர் ஒப்புதல் இல்லை! – குழப்பத்தில் மருத்துவ படிப்புகள்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (12:25 IST)
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வுகள் நடைபெற்ற நிலையில் 16ம் தேதி அதன் முடிவுகள் வெளியாக உள்ளன. முன்னதாக தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்றுவரை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் மசோதாவை ஏற்று கையெழுத்திடாததால் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு இந்த கல்வியாண்டில் வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கும் வரை தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்..!

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments