Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

Advertiesment
பரோல்
, வெள்ளி, 27 நவம்பர் 2020 (13:01 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஏற்கனவே ஒருவாரம் பரோல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த பரோல் மூவரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு வாரம் பரோலை நீடித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்  
 
சிறையிலிருக்கும் பேரறிவாளனுக்கு சமீபத்தில் ஒரு வாரம் பரோல் வழங்கப்பட்டது. அந்த பரோல் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் பேரறிவாளனுக்கு வழங்கிய பரோல் மேலும் 90 நாட்கள் நீடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது 
 
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சுப்ரீம் கோர்ட் இரண்டாவது முறையாக பேரறிவாளனுக்கு தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி ஒரு வாரம் பரோல் வழங்க தமிழக சிறைத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பேரறிவாளனுக்கு இனிமேல் பரோல் நீட்டிக்கப்படாது என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனைக்காக இரண்டாவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெடியாகும் அடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை! – வானிலை ஆய்வு மையம்!