Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரெடியாகும் அடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை! – வானிலை ஆய்வு மையம்!

ரெடியாகும் அடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை! – வானிலை ஆய்வு மையம்!
, வெள்ளி, 27 நவம்பர் 2020 (12:36 IST)
வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில் வேளாண் நிலங்கள், பயிர்கள் வீணாகின. இந்நிலையில் தற்போது வங்க கடலில் அந்தமான் தீவுப்பகுதிக்கு தெற்கே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும், அதற்கு பிறகான 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 1 முதல் 3 வரை தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிரிக்க சிரிக்க பேசி.. சிட்டாய் பறந்த மாப்பிள்ளை! – மணமகள் அதிர்ச்சி!