Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
, திங்கள், 23 நவம்பர் 2020 (15:53 IST)
ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் வழங்கியுள்ளது சிறை நிர்வாகம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு தமிழர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றியும் இன்னும் அவர்கள் விடுதலையாகவில்லை.

இந்த நிலையில் சிறையில் இருக்கு எழுவரில் ஒரு சிலர் அவ்வப்போது பரோலில் வெளிவந்து மீண்டும் சிறைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 45 நாள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் சிறுநீர் தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வரும் பேரறுவாளனை நிரந்தரமாக விடுதலை செய்யவேண்டும் என அவரின் தாயார் அற்புதம் அம்மாள் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தமிழக எதிர்க்கட்சிகளும் இது சம்மந்தமாக கோரிக்கைகளை தொடர்ந்து வைத்து வருகின்றன.

இந்நிலையில் இன்றோடு பேரறிவாளனின் பரோல் முடியவுள்ள நிலையில் அவரின் சிகிச்சைக்காக மேலும் ஒரு வாரம் பரோலை நீட்டித்துள்ளது உச்சநீதிமன்றம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாப்பாடு ருசியாக இல்லை… 77 வயது கணவன் மனைவிக்கு செய்த கொடுமை!