Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரியலூர் அருகே வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்!? – தேடி சென்ற மக்கள் ஏமாற்றம்!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (11:04 IST)
அரியலூர் அருகே ஹெலிகாப்டர் போன்ற ஊர்தி வெடிக்கும் சத்தம் கேட்டதாக பொதுமக்கள் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் அருகே உள்ள குழுமூர் அருகே ஹெலிகாப்டர் போன்ற வான ஊர்தி ஒன்று வெடித்து சிதறுவது போன்ற சத்தம் மக்களுக்கு கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வானத்தில் ஏதேனும் தென்படுகிறதா என பார்த்துள்ளனர்.

மேலும் சத்தம் கேட்ட திசை நோக்கி சுற்றி இருந்த 5 கிராமத்தை சேர்ந்த மக்களும் சென்றும் ஹெலிகாப்டர் போன்ற ஊர்தி ஏதானும் விழுந்து கிடக்கிறதா என்றும் தேடியுள்ளனர். இதனால் அப்பகுதியே பெரும் கூட்டமாகவும் பரபரப்பாகவும் இருந்துள்ளது. முன்னெச்சரிக்கையாக இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் அவ்விடம் விரைந்துள்ளன.

ஆனால் அங்கு எந்த ஹெலிகாப்டரும் இல்லாததால் சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் திரும்ப சென்றன, இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு எழுந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments