Publish Date: Mon, 30 Aug 2021 (19:52 IST)
Updated Date: Mon, 30 Aug 2021 (19:54 IST)
தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து செப்டம்பர் 15-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது
இந்த ஊரடங்கில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல அனுமதி இல்லை என்றும் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டு தினங்களில் வழிபாட்டு கூடங்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்த தடை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த அறிவிப்பில் சென்னை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் இதர இடங்களில் கிறிஸ்துவ சமயத்தினர்களால் கொண்டாடப்பட உள்ள மரியன்னை பிறந்த நாள் திருவிழாவின் போது பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி மரியன்னை பிறந்தநாள் கிறிஸ்துவ சமயத்தினர்களால் விசேஷமாக கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினத்தில் பொதுமக்கள் பொது வெளியில் கூட அனுமதிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது