Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி: தமிழக அரசு அறிவிப்பு!

செப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி: தமிழக அரசு அறிவிப்பு!
, திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (19:31 IST)
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது என்பதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்வதற்காக முக்கிய கூட்டம் ஒன்றைக் கூட்டினார். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் திட்டமிட்டபடி 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது இதனை அடுத்து கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படாது என்று கூறப்பட்ட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தாகியுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெரீனா மூடப்படுமா? சென்னை மாநகராட்சி எச்சரிக்கையால் பரபரப்பு