Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பகுதிகளில் மழை...

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பகுதிகளில் மழை...
, சனி, 19 ஜூன் 2021 (09:00 IST)
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மழை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

 
இந்நிலையில், தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல் & டீசல் விலையில் மாற்றமில்லை... குறைவதற்கு வாய்ப்பும் இல்லை?