Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவலர்களுக்கு ஊக்கத்தொகை… தமிழ்நாடு அரசு 58.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

காவலர்களுக்கு ஊக்கத்தொகை… தமிழ்நாடு அரசு 58.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு!
, வெள்ளி, 18 ஜூன் 2021 (15:39 IST)

கொரோனா கால ஊரடங்கில் பணியாற்றிய காவலர்களுக்கு 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அது சம்மந்தமாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது தன்னலமற்ற பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும், தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு, ரூபாய் 5,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு..ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் இன்று 58 கோடியே 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம், காவல் துறையைச் சார்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறை பணியாளர்கள், தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை பெறுவார்கள்எனக் கூறியுள்ளார்


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ 4 கோடி க்ளோஸ்: பப்ஜி மதன் வங்கிக்கணக்கு முடக்கம்!