Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வெட்டு உண்மையாகிவிடும்போல் தெரிகிறதே! அமைச்சர் ஆகிறாரா ஓபிஎஸ் மகன்

Webdunia
திங்கள், 20 மே 2019 (21:00 IST)
சமீபத்தில் தேனி தொகுதியில் உள்ள ஒரு கோவிலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியின் எம்பி என கல்வெட்டில் பொறிக்கப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த பின்னர் ஒருவரை இந்த விஷயத்திற்காக பலிகடா ஆக்கப்பட்டு அவர் கைதும் செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவின்படி தேனி தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெறுவார் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்த தொகுதியில் அமமுகவின் தங்கத்தமிழ்செல்வன் ஓரளவுக்கு வாக்குகளை பிரித்தாலும் தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ஈவிகேஎஸ் இளங்கோவனை காங்கிரஸ் களமிறக்கியது தவறு என்றும், இதனாலேயே ஓபிஎஸ் மகன் வெற்றி பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் டெல்லியில்  நாளை நடைபெறவிருக்கும் பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் துணைமுதல்வர் ஓபிஎஸ் கலந்து கொள்ளவிருக்கின்றார் இந்த கூட்டத்தில் தனது மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்க ஓபிஎஸ் காய் நகர்த்துவார் என்றே கூறப்படுகிறது.
 
ஆக மொத்தத்தில் தேனியில் உள்ள கோவிலில் பதிக்கப்பட்ட கல்வெட்டு பலிப்பது மட்டுமின்றி அதற்கு மேல் அமைச்சரும் ஆகிவிடுவார் ஓபிஎஸ் மகன் என்றே பரவலாக பேசப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments