Publish Date: Fri, 15 Jul 2022 (11:37 IST)
Updated Date: Fri, 15 Jul 2022 (11:38 IST)
கோமாளி கூடாரத்திற்கு இல்லை அதிகாரம்.. எடப்பாடிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என அதிமுக விலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மகன் மற்றும் அதிமுக எம்பி ரவீந்திரநாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
என் அங்கீகாரம் நாடாளுமன்றத்தில் இரட்டை இலையை அங்கீகரித்து கிடைத்த ஒரே ஒரு வெற்றி. அது உண்மை தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த வெற்றி. கழக நிரந்தர பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு கொடுத்த வரம். அதை நீக்கவும் ஒதுக்கவும் கோமாளி கூடாரத்திற்கு அதிகாரம் இல்லை
கொள்ளைப்புற வழி வந்தவர்களுக்கு கொள்கை விலகி சென்றது வெகுதூரம். பதவி கொடுத்தவர்களுக்கே பாதகம் விளைவித்த இடையில் வந்த எடை இல்லா பாடிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது
ஒன்றரை கோடி உண்மையான தொண்டர்களே! ஒன்றிணைவோம்! ஒற்றுமையோடு வெற்றி பெறுவோம்! என்று பதிவு செய்துள்ளார். அவரது இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது