Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓபிஎஸ் இன்று அவசர ஆலோசனை.. பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவா?

Advertiesment
ஓபிஎஸ்

Siva

, புதன், 30 ஜூலை 2025 (08:16 IST)
கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர பாஜக ஆதரவாளராக செயல்பட்டு வந்த ஓ. பன்னீர்செல்வம் நேற்று திடீரென மத்திய அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து, அவர் இன்று தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்த இருப்பதாகவும், இதில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து முக்கிய முடிவை எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, அவரை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கேட்டிருந்ததாகவும், ஆனால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ், நேற்று திடீரென மத்திய அரசை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
 
பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதும், அதன் விளைவாக ஓபிஎஸ் எடுத்த இந்த அதிரடி நிலைப்பாடும், அவரது அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், இன்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாகவும், பாஜக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.
 
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர், தனது நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் விரிவாக தெரிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, தமிழக பாஜக கூட்டணிக்கு ஒரு புதிய சவாலாக அமையும் என்றும், தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட நகர்வுகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edtied by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து! மாநகராட்சி அறிவிப்பு..!