Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

Advertiesment
அமித் ஷா

Siva

, வியாழன், 15 மே 2025 (18:45 IST)
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று   செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
 
"சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே. நாங்கள் இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறோம். யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எங்களது நிலைபாட்டை தெரிவித்துவிட்டோம்.
 
மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து, தேர்தல் கூட்டணிக் குறித்து விரைவில் அறிவிப்போம். கூட்டணி தொடர்பாக யாருடனும் மறைமுகமாக பேசவில்லை.
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது, தற்காலிகமானதே. தவெக தலைவர் விஜய் நல்ல இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறார்," என்றார்.
 
முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களை இணைக்காமல் அதிமுக வெற்றிப் பெற முடியாது” என்று தெரிவித்தார்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்