Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாடு ஒரே தேர்தல்: அதிமுக பலிகடா ஆகப் போகிறது! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (12:06 IST)
ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் அதில் அதிமுக பலி கடா ஆகிவிடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



நாடு முழுவதும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” முறையை அமலுக்கு கொண்டு வர மத்திய பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பலமாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்பட்டால் பல கட்சிகளும் பாதிக்கப்படும். அதில் அதிமுகவும் ஒன்று. ஆனால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணராமல் பலி கடா போல தானாக சென்று தலையை கொடுத்துள்ளது அதிமுக” என விமர்சித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படலாம் என பேசிக் கொள்ளப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments