Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுக்கேட்டு உள்ளே வராதே… தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (16:20 IST)
கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள சிஙகாநல்லூர் தொகுதிக்குட்பட்ட கிராமம் ஒண்டிபுதூர். அந்த கிராமத்தில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கென்று பொதுக் கழிப்பிடம் இல்லாததால் மக்கள் அனைவரும் திறந்தவெளியில் மலம் கழித்து வருகின்றனர். இதனால் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுவரை நடந்த தேர்தல்களில் எல்லாம் கழிப்பறை கட்டித்தருவேன் என்று உறுதியளித்த எந்த வேட்பாளரும் அதை நிறைவேற்றாததால் இந்த முறை தேர்தலை புறக்கணிக்க அந்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் ’ஓட்டுக் கேட்டு உள்ளே வராதே என்ற பதாகையோடு போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments