Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வரும் 28 ஆம் தேதி சென்னை கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி- மின்வாரிய தொழிலாளர்கள்

tamilnadu
, வெள்ளி, 17 மார்ச் 2023 (23:03 IST)
வரும் 28 ஆம் தேதி சென்னை கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி நடைபெறுவதை முன்னிட்டு இன்று கரூரில் மின்வாரிய தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
மின்வாரிய ஊழியர்கள் வருகின்ற 28-ம் தேதி சென்னையில் நோக்கி மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளதால், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு குழு சார்பில் ஆயுத்த விளக்க கூட்டம் பால்ராஜ் - AlCCTU கரூர் வட்ட கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் தலைமையில் கரூர்- கோவை நெடுஞ்சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை அறிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
 
இதில் காலி பணியிடங்களை நிரப்புக, நிரந்தர தன்மை வாய்ந்த பதவிகளை அவுட் அவுட்சோர்சிங்கிற்கு விடதே, ஊழியர்களின் 23 சலுகைகளை பறித்திடும் அரசானையை ரத்து செய்க,மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்கி வரும் ஊதிய உயர்வு மற்றும் பண பயன்களை நிலுவைத் தொகையுடன் வழங்கிடுக, பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்து என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுருத்தி தமிழக அரசு எதிராக கண்டன முழக்கமிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கு மேற்பட்ட மின் வாரிய ஊழியர்கள் அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணின் இதயத்தை எடுத்து சமைத்துச் சாப்பிட்ட கொடூர நபர் கைது!