Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்தில் மழைபெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்தில்  மழைபெய்ய வாய்ப்பு
, புதன், 15 மார்ச் 2023 (21:40 IST)
தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில்  வடஉள்பகுதிகளில்  நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு  இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடுமென்று கூறியது.

மேலும்,   நாளை( மார்ச்16) முதல் வரும் மார்ச்19 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்  ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசமானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், இன்னும் 3 மணி நேரத்தில், தமிழகத்திலுள்ள நீலகிரி, கரூர், நாமக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் ஆகிய  மாவட்டங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க முடிவு: மத்திய அரசு தகவல்..!