Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது: முன்னாள் முதல்வர் குமாரசாமி..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (14:20 IST)
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான குமாரசாமி ட்விட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
 
தமிழ்நாட்டிற்கு தினமும் 5000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்து உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்றும், எக்காரணம் கொண்டும் கர்நாடக அரசு தண்ணீரை திறக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் விவசாயிகள் மீதும், பெங்களூரு மக்கள் மீதும் அக்கறை இருந்தால் அரசு தண்ணீரை திறந்து விட்டிருக்காது என்றும்,  பெங்களூரு மக்களின் மௌனம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும்,  அண்டை மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து நம்முடைய நிலம், நீர், பொருளாதாரத்தை பயன்படுத்தி வசதியாக இருப்பவர்கள் கூட காவிரிக்காக குரல் எழுப்பவில்லை என்றும் அவர் கூறினார்.
 
மேலும்  இவர்களில் யாருக்கும் காவிரி நீர் பற்றி கவலையில்லை என்றும் குமாரசாமி ட்விட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments