Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் பரவும் நிபா வைரஸ்.. எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் தமிழகம்..!

கேரளாவில் பரவும் நிபா வைரஸ்.. எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் தமிழகம்..!
, புதன், 13 செப்டம்பர் 2023 (07:31 IST)
கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக கேரள எல்லையோர மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மேலும் கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் முழுமையான காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தமிழ்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பாக கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் 24 மணி நேரமும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து உத்தரவை  அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொதுச் சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் பிறப்பித்துள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல்: உறுதி செய்த மத்திய அரசு!