Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை.. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு..!

Advertiesment
TK Sivakumar
, செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (14:27 IST)
இனி தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை என  கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
 
அவர் இதுகுறித்து மேலும் கூறியபோது, ‘கர்நாடக அணைகளில் இருந்து இனி தமிழகத்திற்கு திறப்பதற்கு தண்ணீர் இல்லை என்றும், எனவே இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது எனவும் துணை முதல்வரும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
மேலும் தற்போது உள்ள தண்ணீர் குடிநீர் பயன்பாட்டிற்கே போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ள நிலையில் டி.கே.சிவக்குமாரின் இந்த அறிவிப்பு தமிழகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி: 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்..!