Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம் - பற்றாக்குறையே காரணம்!

சென்னையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம் - பற்றாக்குறையே காரணம்!
, திங்கள், 28 ஜூன் 2021 (11:41 IST)
இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது என இணையத்தில் வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி அறிவிப்பு. 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி பற்றாக்குறை இருந்ததாகவும் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தடுப்பூசி தொகுப்புகளை சரியாக தரவில்லை என்றும் தமிழக அரசின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதன் பின்னர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு இந்த நிலை சீரானது. 
 
இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இன்று பகல் 12 மணிக்குள் அனைத்து தடுப்பூசிகளும் தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார். இதனிடையே, தடுப்பூசி பற்றாகுறையால் சென்னையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 
 
சென்னையில் 45, நகர்ப்புறத்தில் 16 என 61 மையத்திலும் தடுப்பூசி கையிருப்பு இல்லை. இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது என இணையத்தில் வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. தடுப்பூசி மீண்டும் வந்ததும் தடுப்பூசி போடும் பணி துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

20,000 ஆண்டு முன்பே கொரோனா: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!