Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை விற்பனை இல்லை - பெட்ரொல் விற்பனையாளர் சங்கம்

Advertiesment
No sales
, சனி, 4 ஜூலை 2020 (16:06 IST)
தமிழகத்தில் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மக்களை கொரொனா தாக்குதலில் இருந்து பாதுக்காக்க அரசு தீவிர முயற்சிகள் எடுத்து துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரொனா பாதிப்பு 6 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.

வரும் ஜூலை 30 வரை தமிழகத்தில் 5 மாவடங்களில் முழு ஊரங்கு உள்ள நிலையில் மற்ற மாவட்டங்களில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  தமிழகத்தில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் இன்று நள்ளிரவு 12 முதல் நாளை நள்ளிரவு வரை விற்பனை இல்லை என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதாவது,  ஆம்புலன்ஸ், பால் , அவசர  மருத்துவ சிகிச்சை வாகனங்களுக்கு மட்டும் நாளை பெட்ரோல், டீசல்  விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திங்கட்கிழமை முதல் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வந்தால் தான் பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என  தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரிவாளுடன் வீதியில் சென்ற ரவுடிகள்… அதிரவைக்கும் வீடியோ