Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மட்டுப்பட தொடங்கிய பெட்ரோல்,டீசல் விலை உயர்வு! – இன்றைய நிலவரம்!

மட்டுப்பட தொடங்கிய பெட்ரோல்,டீசல் விலை உயர்வு! – இன்றைய நிலவரம்!
, திங்கள், 29 ஜூன் 2020 (08:38 IST)
கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை விலையேற்றம் தற்போது மெல்ல குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கோரோனா பாதிப்பினால் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ள நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோலுக்கான வரி 28லிருந்து 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி 20லிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர தொடங்கியது. இந்நிலையில் இன்று முந்தைய நாட்களை விட விலையேற்றம் குறைவான அளவில் உள்ளது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 4 பைசா உயர்ந்து ரூ.83.63க்கும், டீசல் லிட்டருக்கு 11 பைசா உயர்ந்து ரூ.77.72க்கும் விற்பனையாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீஸ் விசாரணைக்கு சென்ற ட்ரைவர் மரணம்!- தென்காசியில் பரபரப்பு!