Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட்டா? மாநகராட்சி விளக்கம்

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (17:30 IST)
சென்னையின் ஒருசில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர் மற்றும் கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாவும் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை சென்னை மாநகராட்சி தற்போது மறுத்துள்ளது.
 
சென்னையின் சில பகுதிகளில் ரெட் அலர்ட் விடப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை சென்னை பெருநகர மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியபோது, ‘கொரோனா காரணமாக சென்னையில் ரெட் அலர்ட் எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் மக்கள் அச்சப்பட வேண்டாம்’ என்றும் தெரிவித்துள்ளார்.
 
சென்னை மாநகராட்சி ஆணையரின் இந்த அறிவிப்புக்கு பின்னரே  அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர் மற்றும் கோட்டூர்புரம் ஆகிய பகுதி மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments