சென்னையின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட்டா? மாநகராட்சி விளக்கம்

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (17:30 IST)
சென்னையின் ஒருசில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர் மற்றும் கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாவும் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை சென்னை மாநகராட்சி தற்போது மறுத்துள்ளது.
 
சென்னையின் சில பகுதிகளில் ரெட் அலர்ட் விடப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை சென்னை பெருநகர மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியபோது, ‘கொரோனா காரணமாக சென்னையில் ரெட் அலர்ட் எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் மக்கள் அச்சப்பட வேண்டாம்’ என்றும் தெரிவித்துள்ளார்.
 
சென்னை மாநகராட்சி ஆணையரின் இந்த அறிவிப்புக்கு பின்னரே  அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர் மற்றும் கோட்டூர்புரம் ஆகிய பகுதி மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments