அரசு பேருந்துகளின் கட்டணம் விரைவில் உயர்த்தப்படும் என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இதற்கு அமைச்சர் சிவசங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளின் கட்டண உயர்வு கிடையாது என்றும், பேருந்து கட்டணம் தொடர்பான மக்களின் கருத்து நீதிமன்றத்தில் தான் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே மின்கட்டண உயர்வு என்ற செய்தி வெளியான போதும், மின்கட்டணம் உயராது என்பதை தெளிவுபடுத்தினோம் என்று கூறிய சிவசங்கர், அதேபோல் தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்வு என்ற தகவலையும் மறுக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, குறைந்தபட்சம் தேர்தல் வரை அரசு பேருந்து கட்டண உயர்வு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.