ஒரே விடுதியை சேர்ந்த 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா! – நீலகிரியில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (11:53 IST)
நீலகிரியில் ஒரே விடுதியை சேர்ந்த 21 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை நீலகிரியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நீலகிரியில் உள்ள தன்னார்வல தொண்டு நிறுவனத்தின் விடுதியில் தங்கி படித்து வந்த பள்ளி மாணவிகளுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களை சோதித்ததில் 21 மாணவிகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் ஒரு ஊழியருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலையில் விடுதியில் உள்ள மற்ற மாணவிகள், ஊழியர்களுக்கும் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரே விடுதியை சேர்ந்த மாணவிகள் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments