Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி ஏ பி சி என செண்டர்கள் எல்லாம் கிடையாது… சிம்பு கருத்து!

இனி ஏ பி சி என செண்டர்கள் எல்லாம் கிடையாது… சிம்பு கருத்து!
, புதன், 1 டிசம்பர் 2021 (11:45 IST)
நடிகர் சிம்பு கலந்துகொண்ட டிவிட்டர் ஸ்பேஸஸ் உரையாடலில் அவர் மாநாடு படத்தின் வெற்றி குறித்து பேசியுள்ளார்.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது. ரிலிஸ் ஆனதில் இருந்து ஐந்து நாட்களாக வசூல் குறையாமல் இருப்பதே இந்த படத்தின் வெற்றியின் சாட்சி.

இந்நிலையில் நேற்று டிவிட்டர் ஸ்பேஸஸில் நடந்த கலந்துரையாடலில் படத்தின் நாயகன் சிம்பு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் ‘இனி ஏ பி சி என செண்டர்கள் எல்லாம் கிடையாது. ஒரு நல்ல கதையை சொன்னால் ஒரு தரப்பினரை மட்டுமே திருப்திப்படுத்தும் என்று சொல்வதை நிறுத்தும் காலம். இந்த சினிமா தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெட்பிளிக்ஸில் ‘மணி ஹெய்ஸ்ட்’ அடுத்த பாகம்: டைட்டில் இதுதான்!