Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே விடுதியை சேர்ந்த 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா! – நீலகிரியில் அதிர்ச்சி!

ஒரே விடுதியை சேர்ந்த 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா! – நீலகிரியில் அதிர்ச்சி!
, புதன், 1 டிசம்பர் 2021 (11:53 IST)
நீலகிரியில் ஒரே விடுதியை சேர்ந்த 21 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை நீலகிரியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நீலகிரியில் உள்ள தன்னார்வல தொண்டு நிறுவனத்தின் விடுதியில் தங்கி படித்து வந்த பள்ளி மாணவிகளுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களை சோதித்ததில் 21 மாணவிகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் ஒரு ஊழியருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலையில் விடுதியில் உள்ள மற்ற மாணவிகள், ஊழியர்களுக்கும் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரே விடுதியை சேர்ந்த மாணவிகள் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடாளுமன்றத்தில் அமளி... இரு அவைகளும் ஒத்திவைப்பு!!