Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீலகிரியில் தொடர் கனமழை.. சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்..!

Siva
செவ்வாய், 17 ஜூன் 2025 (10:16 IST)
நீலகிரியில் கடந்த சில நாட்களாகத் தொடர் மழை பெய்து வருவதால், சுற்றுலாத் தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன என்றும், எனவே சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இதன் காரணமாக 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் இருளில் தவித்ததாகவும் கூறப்படுகிறது. மின்கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் மின் கம்பிகள் முறிந்து விழுந்ததாகவும், இதனால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் மின்சாரத் துறை அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்கள் கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, தொட்டபெட்டா காட்சி முனை, பைன் ஃபாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலாத் தளங்கள் மூடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை தர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி UPI பரிவர்த்தனைகள் வேகமாக நடக்கும்! புதிய விதிகள் இன்று முதல் அமல்!

8 மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

டெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள்: இஸ்ரேலை அடுத்து டிரம்பும் எச்சரிக்கை..!

டெல்லி குறித்து தமிழக இளைஞரின் பார்வை.. வைரலாகும் சமூக வலைத்தள பதிவு..

ஈரான் அரசு டிவி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. செய்தி வாசித்த பெண் அலறியடித்து ஓட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments