Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழகத்திற்கு காத்திருக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

Prasanth K
செவ்வாய், 17 ஜூன் 2025 (10:09 IST)

வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் ஒரே நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்மேற்கு பருவமழை காரணமாக அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி அடிக்கடி உருவாகி வரும் நிலையில் அரபிக்கடலோர மாநிலங்கள் தொடர் மழைப்பொழிவை சந்தித்து வருகின்றன, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் நல்ல மழைப்பொழிவை சந்தித்துள்ளன.

 

இந்நிலையில் தற்போது தெற்கு குஜராத் அதன் சுற்றுவட்டார பகுதி அருகே அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியும், அதேசமயம் வங்கக்கடலில் வங்கதேசம் அதனை ஒட்டிய மேற்கு வங்கம் பகுதியிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் அடுத்த 22ம் தேதி வரை பரவலாக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் பொதுச்செயலாளர் பதவியை ஈபிஎஸ் இழப்பார்: கே.என்.நேரு

முருகன் இருக்கும் இடமெல்லாம இந்துக்களுக்கு சொந்தம்.. அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி..!

நீலகிரியில் தொடர் கனமழை.. சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்..!

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழகத்திற்கு காத்திருக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments