Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெல்லை பள்ளி விபத்து: மாணவர்கள் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

Advertiesment
nellai School
, வெள்ளி, 17 டிசம்பர் 2021 (13:11 IST)
நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிரைத்துள்ளது. 
 
நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் திடீரென கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் பலியாகியதால் சுற்றி பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,  காவல்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சஞ்சய், விஸ்வரஞ்சன் ஆகிய இருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் மேலும், ஒரு மாணவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் மேலும் 10 ஒமிக்ரான் பாதிப்பு! – 100 பாதிப்பை நோக்கி இந்தியா!