Publish Date: Fri, 05 Feb 2021 (10:50 IST)
Updated Date: Fri, 05 Feb 2021 (10:52 IST)
புதுச்சேரியின் ஆளுனராக கிரண்பேடி நியமிக்கப்பட்டதில் இருந்தே அவருக்கும் புதுச்சேரி முதல்வருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. கிரண்பேடி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக உள்ளதாக நாராயணசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என நாராயணசாமி தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.