Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழிப்பறைக்கு அறிஞர் அண்ணா பெயர்.. இரவோடு இரவாக அழிக்கப்பட்டதால் பரபரப்பு..!

Siva
செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (13:51 IST)
கோவையில் கழிப்பறைகளுக்கு முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கன் ஆகியோர்களின் பெயர்கள் வைக்கப்பட்ட நிலையில், கடும் எதிர்ப்பு எழுந்ததால் இரவோடு  இரவாக அகற்றப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
 
கோவை 95வது வார்டு அண்ணா நகரில் மாநகராட்சி சார்பில் பொது கழிப்பிடம் ஒன்று உள்ளது. அதற்கு புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்ட நிலையில், முன்பக்க சுவரில் தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா  பெயரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கக்கன் பெயரும் வைக்கப்பட்டது.
 
இதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்த நிலையில், ஈரோடு இரவாக அந்த பெயர்கள் அகற்றப்பட்டன.
 
இது குறித்து கோவை மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நிமிடம் தாமதமாக வந்ததால் இருண்ட அறையில் பூட்டப்பட்ட பள்ளி மாணவர்.. விசாரணைக்கு உத்தரவு

நாயை துன்புறுத்தவும் கூடாது.. நாய்க்கடி எதிராக நடவடிக்கையும் எடுக்க வேண்டும்: நீதிமன்றம்

காசோலை பரிவர்த்தனை இனி மின்னல் வேகத்தில்: சில மணிநேரங்களில் பணம் வரவு வைக்கப்படும்: ரிசர்வ் வங்கி

தமிழகத்தில் கருவுறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: குழந்தை திருமணங்கள் அதிகரிப்பா?

இந்த ஆண்டு இறுதிக்குள் மேட் இன் இந்தியா' சிப்கள்.. பிரதமர் மோடி பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments