Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது - உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (11:00 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினியை முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக நளினி, பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். சமீபத்தில் பேரறிவாளன் பரோலில் வெளியே வந்து பின் சிறைக்கு சென்றார்.
 
இந்நிலையில் நளினி தண்டனைக் காலம் முடியும் முன்னே விடுவிக்கும்படி தமிழக அரசுக்கும், உயர்நீதிமன்றத்திலும் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினி, பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உயர்நீதிமன்றம் நளினியை முன்கூட்டியே விடுவிக்க உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments