Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது - உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (11:00 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினியை முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக நளினி, பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். சமீபத்தில் பேரறிவாளன் பரோலில் வெளியே வந்து பின் சிறைக்கு சென்றார்.
 
இந்நிலையில் நளினி தண்டனைக் காலம் முடியும் முன்னே விடுவிக்கும்படி தமிழக அரசுக்கும், உயர்நீதிமன்றத்திலும் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினி, பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உயர்நீதிமன்றம் நளினியை முன்கூட்டியே விடுவிக்க உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments