Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய செல்போனை வாங்குபவர்களுக்கு காவல்துறை ஆணையரின் வேண்டுகோள்

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (20:02 IST)
விலை மலிவாக கிடைக்கின்றது என்பதற்காக பழைய செல்போன்களை வாங்குபவர்களுக்கு மயிலாப்பூர் காவல்துறை ஆணையார் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

சென்னையின் கடந்த சில மாதங்களாக காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட செல்போன்களை அவற்றின் ஐ.எம்.இ.ஐ. எண்களை வைத்து மொபைல் நெட்வொர்க் உதவியுடன் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஒன்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த துணை ஆணையர் மயில்வாகனன் அதன்பின் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'ஒருசிலர் திருட்டு செல்போன்களை கைமாற்றி குறைந்த விலைக்கு விற்று வருவதால், பழைய செல்போன்கள் வாங்கும்போது உரிய ஆவணங்களை பார்த்து வாங்க வேண்டும்.

பழைய செல்போன்களை விற்பனை செய்ய வருபவர்களிடம் புகைப்படத்துடன கூடிய ஆதாரம் ஒன்றை வாங்கிய பின்னரே அந்த போனை விலைக்கு வாங்க வேண்டும் என்று பழைய செல்போன்களை விற்பனை செய்பவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்' என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி மற்றும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! முன்பதிவு தொடங்கியது..!

கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி செய்யலாமா? செந்தில் பாலாஜிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!

பீகாரை வட்டமிடும் பிரியங்கா காந்தி.. ஒரே மாதத்தில் இரண்டு முறை பயணம்..!

H1B விசா கட்டண உயர்வு.. இந்தியாவில் புதிய கிளையை தொடங்கும் அமெரிக்க நிறுவனம்..!

நெல்லையில் மாணவரை அறிவாளால் வெட்டிய சக மாணவன்.. சாதி சண்டையா? போலீஸ் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments