Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடை ரெடியா? தொடங்கியது மழை சீசன்! – 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (08:12 IST)
வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் இன்று 12 மாவட்டங்களின் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரமாக வளிமண்டல சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர், கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 17 மாவட்டங்களின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments