Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடைப்பெற்றது வடகிழக்குப் பருவமழை !!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (13:30 IST)
இன்றுடன் வடகிழக்குப் பருவமழை முழுவதுமாக விலகியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது என்பதும் தெரிந்ததே.  
 
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை நிறைவு பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி இன்றுடன் வடகிழக்குப் பருவமழை தமிழகம் புதுவை காரைக்கால் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கேரளா ஆந்திரா தெற்கு உள் கர்நாடகா பகுதியில் இருந்து முழுவதுமாக விலகியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும், அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments