Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Siva
ஞாயிறு, 23 பிப்ரவரி 2025 (14:49 IST)
பிப்ரவரி 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒரு வாரம் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே கோடை காலம் ஆரம்பித்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு வெப்பம் அதிகரித்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில், இன்னும் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், பிப்ரவரி 25 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்கக்கடலில் நிலவும் காற்று சுழற்சி,  தமிழக கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதால் இந்த மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
 
அதே நேரத்தில், இன்றும் நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும். பிப்ரவரி 25ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments