வேன் மூலம் நடமாடும் பாஸ்போர்ட் சேவை.. சென்னை மக்கள் பயன்படுத்த அறிவுறுத்தல்..!

Mahendran
புதன், 18 ஜூன் 2025 (12:07 IST)
பொதுமக்கள் பாஸ்போர்ட் சேவைகளை இனி எளிதாகப் பெறலாம்! குறிப்பாக, தொலைதூரப் பகுதிகளிலும், குறைந்த வசதிகளுடன் வாழும் மக்களுக்கும் பாஸ்போர்ட் சேவைகளை எளிதாக்கும் நோக்கில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சென்னையில் பாஸ்போர்ட் நடமாடும் வேன் சேவையை தொடங்கியுள்ளது.
 
இந்த சேவை குறித்துப் பேசிய பாஸ்போர்ட் அதிகாரிகள், "தற்போதுள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் மற்றும் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் தவிர, கிராமப்புற விண்ணப்பதாரர்களின் வீட்டு வாசலிலேயே பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதே இந்த நடமாடும் வேன் சேவையின் முக்கிய நோக்கம். இனி பாஸ்போர்ட் பெறுவதற்காக மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதில்லை" என்று தெரிவித்தனர்.
 
இந்த நடமாடும் பாஸ்போர்ட் வேன் முதலில் தாம்பரத்தில் நிறுத்தப்படும். அதன்பின்னர், பாஸ்போர்ட் பெறுவதற்கான தேவைகள் அதிகமாக உள்ள மற்ற பகுதிகளுக்கும் செல்லும். பாஸ்போர்ட் சேவைகளை பெற, வழக்கம் போல் 'பாஸ்போர்ட் சேவா போர்ட்டல்' மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்றும் அதிகாரிகள் கூறினர். 
 
இந்தச் சேவை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவி கோரும் வங்கதேசம்: இந்தியாவுக்கு நெருக்கடி

பட்டப்பகலில் பள்ளி மாணவியை கொலை செய்யும் அளவிற்கு, துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஈபிஎஸ் ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments