Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

Advertiesment
சென்னை மெட்ரோ

Mahendran

, புதன், 11 ஜூன் 2025 (18:59 IST)
சென்னை மெட்ரோ ரயில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென நிறுத்தப்பட்டதால், பயணிகள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளன. 
 
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ்  பக்கத்தில், "தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் மெட்ரோ ரயில் சேவைகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 
 
ஆனால், அதே நேரத்தில் விம்கோ நகர் டிப்போவிற்கும் மீனம்பாக்கத்திற்கும் இடையிலான சேவைகள் வழக்கம் போல இயங்குகின்றன. ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்," எனத் தெரிவித்துள்ளது. 
 
தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டவுடன் மீண்டும் விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!