Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சேராத கூட்டாம், தீராத கவலையில் கமல்! – காத்துவாங்கும் மநீம ஆண்டு விழா!

Advertiesment
மக்கள் நீதி மய்யத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் கூட்டம் வராததால் மய்யத்தார் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்று ஆண்டுகள் நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் நான்காம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாட சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுமார் 8 ஆயிரம் பேர் வருவார்கள் என ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் 3 ஆயிரம் பேர் கூட நிரம்பாததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் 10 மணிக்கே தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இருக்கைகள் நிரம்பாததால் 11 மணியாகியும் கமல்ஹாசன் கேரவனில் காத்துக் கொண்டிருந்துள்ளார். எதிர்பார்த்த அளவு கூட்டம் வராததால் கமல்ஹாசன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூன் மாதத்திற்கு பிறகு முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்??