Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலியல் குற்றங்களுக்கு ஆன் த ஸ்பாட் தண்டனை! – மு.க.ஸ்டாலின் வாக்குறுதி!

பாலியல் குற்றங்களுக்கு ஆன் த ஸ்பாட் தண்டனை! – மு.க.ஸ்டாலின் வாக்குறுதி!
, ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (15:45 IST)
சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்களுக்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமி பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “சென்னையில் 13 வயதுச் சிறுமி சீரழிக்கப்பட்ட கொடுமை கண்டு மனம் பதறுகிறது! சட்டங்கள்-சமூகத்தின் தோல்வி இது. பெண்களின் கண்ணியமே நம் நோக்கமாக வேண்டும். திமுக ஆட்சியில் பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைத்து, ரகசியப்பிரிவும் உருவாக்கப்படும்!” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாம்பேய் நகர 'ஃபாஸ்ட் ஃபுட்' கடை கண்டுபிடிப்பு