Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பன்றியை பார்த்து யானை நகர்ந்து கொண்டதாம்! – குட்டி ஸ்டோரி சொன்ன ஸ்டாலின்!

பன்றியை பார்த்து யானை நகர்ந்து கொண்டதாம்! – குட்டி ஸ்டோரி சொன்ன ஸ்டாலின்!
, வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (13:58 IST)
மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் ஒருமையில் பேசியதற்கு ஸ்டாலின் சொன்ன குட்டி ஸ்டோரி வைரலாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் அரசியல் பிரபலங்கள் இடையே வாக்குவாதம் எழுந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் “சி.வி.சண்முகத்திற்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் தகுதி அற்றவறாக இருந்தாலும் நீங்க வகிக்கும் பதவி மரியாதைக்குரியது. அதற்கு நியாயம் செய்யும் வகையில் நடந்துகொள்ளுங்கள். என்னை சி.வி.சண்முகம் ஒருமையில் பேசியதால் நான் குறைந்து விட போவதில்லை. குளித்து வரும் கோவில் யானை எதிரே வந்த சேற்று பன்றியை கண்டு ஒதுங்கியதாம். அதற்கு பன்றி நினைத்ததாம் யானை நம்மை கண்டு பயந்து விட்டதென்று” என அண்ணா சொன்னதாக குட்டிக்கதை ஒன்றை கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே ஒரு போன் கால்...ரூ.62 ஆயிரம் அபராதம் கட்ட வைத்த மாணவன்!