Publish Date: Fri, 12 Feb 2021 (11:27 IST)
Updated Date: Fri, 12 Feb 2021 (11:28 IST)
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்து மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடர அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் இடையேயான வாக்குவாதங்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் செய்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் மீது ஆதாரம் இன்றி அவதூறு பரப்பும் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடர தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “மு.க.ஸ்டாலினுக்கு தண்டனை பெற்று தரும் வரை என் சட்டப்போராட்டம் தொடரும்” என கூறியுள்ளார்.