Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெனிவா கூட்டத்தில் பேச ஸ்டாலினுக்கு ஐநா மனித உரிமை ஆணையம் அனுமதி!

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (21:56 IST)
ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்று பேச திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு  ஐநா மனித உரிமை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஐநா மனித உரிமை ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் 27 ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஐநா மனித உரிமைகள் ஆணையம் என்பது பன்னாட்டு சட்டங்கள் அமைய கடந்த 1948 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓரு ஐக்கிய நாடுகள் நிறுவனமாகும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளைப் பேணவும் அதன் மேன்மைக்காக உழைக்கவும் ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பின் கூட்டம் தான் வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ளது.
 
இந்த ஆணையத்தின் நடப்புத் தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை என்பவர் உள்ளார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தமிழர் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருக்கும் நிலையில் இன்னொரு தமிழர் இந்த கூட்டத்தில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments