Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! – முதல்வர் தொடங்கி வைத்தார்!

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! – முதல்வர் தொடங்கி வைத்தார்!
, செவ்வாய், 4 ஜனவரி 2022 (11:06 IST)
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் பணமும் அளிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பணத்தை தவிர மற்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 2.15 கோடி குடும்பங்களுக்காக ரூ.1,088 கோடி செலவில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இன்று சென்னை தலைமை செயலகத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகள் வாயிலாக வழங்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா..?? – முதல்வர் தீவிர ஆலோசனை!